துரோகம் அறு

 

விடியல் தேடும் மனமே                       

நெடிய தூரம் விழித்திரு

தினமும் உன்னை விழுங்கவே

திட்டமிடும் கூட்டம் உன்னுடனே

பாசம் என்பர் அதிலே

பரிவு என்பர் எல்லாம் முடிகையில்

வேடம் களைத்து உனக்கு

வேதனை தருவர்..

சமயம் பார்த்து சாரல் வரும்

சாரலோடு மன சாயம் விழும்

விழுந்து விடாதே உனது வாழ்வை

இழந்துவிடாதே

குணமிருந்தால் உன்னை குருடனென்பர்

பணமிருந்தால் உன்னை கடவுளென்பர்

காசுக்கான உலகமிது

கண்கொத்தி பாம்பாய் இருந்துவிடு

ஏமாற்றம் துரோகங்களை

வேறோடு அறுத்து விடு….

 

-சரவணன் கந்தசாமி...


Comments

Popular posts from this blog

எண்கள்

பிஞ்சு மனம்

சிநேகிதம்