Tuesday, 18 August 2020

நம் மொழி

 

ந்திரப் புன்னகையாலே                                   

இந்த மானிடம் ஜெயித்திடுவோம்

மாயக் கருத்துகளகற்றி

உள மருத்துவம் பார்த்திடுவோம்

பத்திர தமிழின் மேலே

வாய்மை முத்திரை பதித்திடிவோம்

இந்த பசை மொழி கொண்டு

பல பாசங்கள் ஒட்டிடுவோம்

அதன் விடைகளென

இத்தகைய கவிதைகள் கட்டிடுவோம்

பாசங்கள் ஒட்ட வைக்க

மனப் பட்டங்கள் வான் பார்க்க

எழுதுகோல் எண்ணிய எழுத்துகளை

எல்லாமாய் பிரசவிக்க

எழில் மொழி துணையிருக்கு

அனைத்தும் அதிலிருக்கு….

 

-சரவணன் கந்தசாமி...

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...