அன்பு

 யிரம் வார்த்தைகளிலும் 

இன்று வரை கண்டறியப்பட்ட 

உலக மொழிகளிலும் 

அகப்படாத வார்த்தை !...

பேரின்பத்தின் நிறைவென்றும் 

பிரபஞ்சத்தின் தொடக்கமென்றும் 

வைத்துக் கொண்டால் 

எப்போதும் !. எங்கும் !.. எல்லாமும் !...

அன்பு மட்டும் தான் !...

உயிர் ஜனிப்பதற்கு - அந்த 

உயிர் வாழ்வதற்கு 

இறுதியாக மண்ணோடு புதைவதற்கு 

தாயாய் , தங்கையாய், 

அண்ணனாய் , தம்பியாய் , 

தாரமாய் , உரவாய்

வாழ்க்கையின் நிமிடங்களை 

விடைகளோடு கடந்து செல்ல வைக்கும் 

உள்ளுயிர் ஆற்றல் !...

அவளும் நானும் 

அவனும் நானும் 

பகிர்ந்து கொள்வதன் 

அடிப்படை நிலை அன்பு !...

காதலென்றும் வரையறுக்கலாம் !...

காமத்தின் நீட்சமென்றும் வரையறுக்கலாம் !...

நிறைவாய் அன்பு 

ஆனந்த பெருவெள்ள கண்ணீரில் 

பேச இயலாத மொழிகளில் 

நீந்தி கடக்கும் 

அன்புக்குரியவர்களுக்காக ...


சரவணன் கந்தசாமி

Comments

Popular posts from this blog

எண்கள்

பிஞ்சு மனம்

சிநேகிதம்