அழுது புலம்பும் கனவே
உன் அவமானங்களை சேமி
நீ இறந்த பின்னும்
உனக்கொரு பிறப்பினை அது தரும்…
அவமானம் அதை
அடை காத்து வை…
உன் கால்களில் சக்கரம்
கட்டி ஓட உதவும்…
அவமானம் அதை
அப்படியே ஜீரணித்து விடாதே
நின்று நிதானமாய்
மென்று தின்று விழுங்கு
இது இரைப்பைக்கு செல்வதற்கல்ல
உன் இதயத்திற்கு செல்வதற்கு…
இரத்த வெள்ளையணுக்களில்
துளி துளியாய் பத்திரப்படுத்து
எதிர்க்கும் விசையிலொரு
எந்திர குணத்தை கொடுக்கும்
கடலின் ஆழம் உந்தன்
வழித் தடம் தான்
எதிர் திசையில் முன்னேறு
எதிர் காற்றின் வேகம் தான்
உன் பலத்தை தீர்மானிக்கும்...
ஆசைகளில் கலந்துபோன
அத்தனை அவமானங்களின்
நயத்தினையும்
அணுஅணுவாய் இரசித்து
உடையாத உணர்வில் சேமி
நாளை என்றொரு
நாள் இருக்கிறது
வெல்லலாம் வா நண்பா.....
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment