Posts

Showing posts from 2020

சிவக்கும் தேசம் : சரவணன் கந்தசாமி

Image
ஆணியம் தலை தாழ்கிறது        ஆஷிஃபாவுக்கும் மணீஷாவுக்கும் நிர்பயாவுக்கும் நிசப்த அஞ்சலி செலுத்த!... இன்னும் எத்தனை நிர்பயாக்கள் நம் கண்ணுக்கு புலப்படாதவர்களோ? பால் மணம் மறக்காத பச்சிளம் குழந்தையும் அறுபதை கடந்து நிற்கும் மூதாட்டிகளும் உடலை வைத்து வேடிக்கையாய் அப்படியென்ன செய்து விட்டார்கள்? அப்படி என்ன தான் செய்ய முடியும்? ஆணவக்காரனே   ஆண் குறியொன்று இருந்துவிட்டால் உமக்கு அடிமையா இந்த அத்தனை பேரும் ? குழந்தை மொழி பார்த்தும் கூட அந்த மென்மை சதையை தொட்டும் கூட காமம் உன்னை கவ்விக் கொண்டால் உன் இதயம் என்ற ஒன்றை அறுத்து நீ வெளியே வை!... உலகில் வஞ்சகமற்றது குழந்தை மொழி உமக்கு வஞ்சகமாய் தெரிவது ஏனோ?... கவர்ச்சி என்ற ஒன்றை நீ காட்டி விடு குழந்தையிடம் மறுமைப் பிறப்பில் மனிதம் இல்லாமல் போகட்டும் அறுபது கண்ட கிழவியிடம் அப்படி என்ன நீ கண்டாய்?... வெறும் , தோலை ருசிக்கும் மிருகமாயின் உன்னை வேட்டையாடி தீர்ப்போமே!... எத்தனை கனவுகள் சுமந்திருப்பாள் எதிர்காலம் ஒன்றை வரைந்திருப்பாள் அத்தனையையும் அழித்தொழிக்க அவள்...

உலக புகைப் பட தினம் : சரவணன் கந்தசாமி

Image
  கா ற்றும் சுவாசமும் போல லென்சுக்கும் அவர்களுக்கும் காதல் பிணைந்து கிடக்கிறது உயிர்மம் நிறைந்து கிடக்கிறது !... க ழுத்தோடு தழுவிக் கொண்டு நெஞ்சோடு ஓடிக்கொண்டு புதிய கோணத்தில் புகைப்படம் செய்யத்தான் தினமும் ஆராதனை செய்கிறார்கள் இந்த அழகு மனசுக்காரர்கள் ஆம்.... அதுவொரு தவம் காதலை கண் வழியே குடித்து ஒளிப்படம் புனையும் அதிசயம்... நிழல்களாய் படர்ந்து நிற்கும் நிஜங்களை உணரும் ஆச்சர்யம் கேமிராவோடு   அவர்களின் நேசம் பித்தனுக்கும் கடவுளுக்குமான பிணைப்பின் பிரதி!... ஆம் அதுவொரு தவம் கேமிராவும் அவைகளும் சிநேகிக்கும் தவம்!... வானத்தை அளக்கும் வண்ணத்துப் பூச்சியாய் வண்ணங்களில் நினைவுகளை ஆசை தீர வரைந்து தீர்க்கிறார்கள்!... தினம் ஒரு திசை துளைத்து புகைப்படம் புனையத்தான் அவர்களும் லென்சும் புரிந்து நடக்கிறார்கள்!... விழும் அருவியையும் எழும் கதிரவனையும் வானத்தை கடக்கும் வல்லூரையும் நிறுத்தி அழகுபார்க்கும் நிபுணத்துவ காதலர்கள்!... எனக்கும் உனக்கும் எட்டாத பார்வையொன்றை லென்சு குவளை வழியே அழகாய் அழுத்தமாய் அவர்கள் ஆர...

அன்பு

Image
  ஆ யிரம் வார்த்தைகளிலும்  இன்று வரை கண்டறியப்பட்ட  உலக மொழிகளிலும்  அகப்படாத வார்த்தை !... பேரின்பத்தின் நிறைவென்றும்  பிரபஞ்சத்தின் தொடக்கமென்றும்  வைத்துக் கொண்டால்  எப்போதும் !. எங்கும் !.. எல்லாமும் !... அன்பு மட்டும் தான் !... உயிர் ஜனிப்பதற்கு - அந்த  உயிர் வாழ்வதற்கு  இறுதியாக மண்ணோடு புதைவதற்கு  தாயாய் , தங்கையாய்,  அண்ணனாய் , தம்பியாய் ,  தாரமாய் , உரவாய் வாழ்க்கையின் நிமிடங்களை  விடைகளோடு கடந்து செல்ல வைக்கும்  உள்ளுயிர் ஆற்றல் !... அவளும் நானும்  அவனும் நானும்  பகிர்ந்து கொள்வதன்  அடிப்படை நிலை அன்பு !... காதலென்றும் வரையறுக்கலாம் !... காமத்தின் நீட்சமென்றும் வரையறுக்கலாம் !... நிறைவாய் அன்பு  ஆனந்த பெருவெள்ள கண்ணீரில்  பேச இயலாத மொழிகளில்  நீந்தி கடக்கும்  அன்புக்குரியவர்களுக்காக ... சரவணன் கந்தசாமி

கிழி

Image
  கா ற்றைக் கிழிக்க                                     எத்தனிக்கும் வண்ணத்துப்பூச்சியின்                சிறகுகளின் வலிமை போதாதா புயலின் வேகத்தை கடக்க ….? -சரவணன் கந்தசாமி...

எழிலி

Image
  அ ந்தி மாலையே                                       ஆரிருள் எழிலே அருமை கவியே அழகு சிற்பமே வானத்தின் முனைதொடும் முக்கூடல் தேரே … பழங்களின் நவரசமே பரிமாணத்தின் அழகு ரசமே … திருத்தமான புன்னகையின் திகட்டாத என்னவளே ….. தினமும் உம்மை காணவே திணறி திரியுதடி என் மனமே …. -சரவணன் கந்தசாமி...  

வெல்லலாம் வா நண்பா

Image
  அ ழுது புலம்பும் கனவே                              உன் அவமானங்களை சேமி நீ இறந்த பின்னும் உனக்கொரு பிறப்பினை அது தரும் … அவமானம் அதை அடை காத்து வை … உன் கால்களில் சக்கரம் கட்டி ஓட உதவும் … அவமானம் அதை அப்படியே ஜீரணித்து விடாதே நின்று நிதானமாய் மென்று தின்று விழுங்கு இது இரைப்பைக்கு செல்வதற்கல்ல உன் இதயத்திற்கு செல்வதற்கு … இரத்த வெள்ளையணுக்களில் துளி துளியாய் பத்திரப்படுத்து எதிர்க்கும் விசையிலொரு எந்திர குணத்தை கொடுக்கும் கடலின் ஆழம் உந்தன்  வழித் தடம் தான்  எதிர் திசையில் முன்னேறு எதிர் காற்றின் வேகம் தான்  உன் பலத்தை தீர்மானிக்கும்... ஆசைகளில் கலந்துபோன  அத்தனை அவமானங்களின்  நயத்தினையும்  அணுஅணுவாய் இரசித்து உடையாத உணர்வில் சேமி நாளை என்றொரு  நாள் இருக்கிறது வெல்லலாம் வா நண்பா.....  -சரவணன் கந்தசாமி...  

துரோகம் அறு

Image
  வி டியல் தேடும் மனமே                        நெடிய தூரம் விழித்திரு தினமும் உன்னை விழுங்கவே திட்டமிடும் கூட்டம் உன்னுடனே பாசம் என்பர் அதிலே பரிவு என்பர் எல்லாம் முடிகையில் வேடம் களைத்து உனக்கு வேதனை தருவர் .. சமயம் பார்த்து சாரல் வரும் சாரலோடு மன சாயம் விழும் விழுந்து விடாதே உனது வாழ்வை இழந்துவிடாதே … குணமிருந்தால் உன்னை குருடனென்பர் பணமிருந்தால் உன்னை கடவுளென்பர் காசுக்கான உலகமிது கண்கொத்தி பாம்பாய் இருந்துவிடு ஏமாற்றம் துரோகங்களை வேறோடு அறுத்து விடு ….   -சரவணன் கந்தசாமி...

நம் மொழி

Image
  ம ந்திரப் புன்னகையாலே                                    இந்த மானிடம் ஜெயித்திடுவோம் … மாயக் கருத்துகளகற்றி உள மருத்துவம் பார்த்திடுவோம் பத்திர தமிழின் மேலே வாய்மை முத்திரை பதித்திடிவோம் இந்த பசை மொழி கொண்டு பல பாசங்கள் ஒட்டிடுவோம் அதன் விடைகளென இத்தகைய கவிதைகள் கட்டிடுவோம் … பாசங்கள் ஒட்ட வைக்க மனப் பட்டங்கள் வான் பார்க்க எழுதுகோல் எண்ணிய எழுத்துகளை எல்லாமாய் பிரசவிக்க எழில் மொழி துணையிருக்கு அனைத்தும் அதிலிருக்கு ….   -சரவணன் கந்தசாமி...

மனிதம் பேசு

Image
சா தியம் பேசு                                                     மதமும் பேசு மானிட அறிவின் எல்லையில் நின்று மகுடம் சூட்டு சாதிகள் இல்லையடி பாப்பா - என்ற பாரதியை போற்றி பள்ளி பதிவேட்டில் சாதியை ஏற்றும் சாதிகள் தானே நாம் … உள்ளுக்குள் நிறைந்த இறையை உயர்வாய் தாழ்வாய் நீ நான் பார்க்க மதமென பிரித்தது நாம் தானே … சாதியத்தின் பின்புலம் தமிழின சமூகத்தில் குருதியோடு குலாவி திரியும் மிகை நுட்பம் – எனவே உன் சாதியம் பற்று … இறையின் நிறையை உன் விருப்பப்படி உள்ளத்தில் நிறுத்து …. சாதியம் ஒழிகவென்று தோள்தூக்கும் எசமானர்களே உங்களால் தான் சாதியம் இன்னும் வாழ்கிறது … மதசார்பற்ற என்று உரைக்கும் மாமனிதர்களே உம்மால் தான் மதங்களில் நிம்மதி மறந்து போனது … உன் சாதியம் பேசு … உன் மதத்தை பேசு … சன்நாயக நாட்டில் உன் உரிமை நீ பேசு …  உன்னை போன்றதொரு உணர்வு இருக்கும் அடுத்தவருக்கும் சமயங்களின் நோக்கங்கள் ...

அழகின் கர்வம்

Image
  அ ழகில் வகுபடாத பேரழகு                           பொன்னிற சாயல் புயல் காற்றின் கர்வம் நான் பாதங்களை தரையில் வைத்திருப்பதை மறக்கடிக்கும் மிளிர்வு … இளங்கீற்று   இருதுளை மூக்கில் வெளியேற்றாத முனைப்பு … உறவுக்காரி சொல்லுக்கு சிரித்தும் சிரிக்காமலும் புன்னகை செய்யும் வித்தகி தாமரை இலையில் தண்ணீர்பட்டதாய் வழுக்கி விழுந்து வழுக்கி விழுந்து அந்த புன்னகையை எழுத நினைத்து தினமும் தோற்கிறேன் … கர்வத்தில் வகுப்பெடுத்து நாணத்தில் தாலைவாரி நளினத்தை உருண்டை திரட்டி என் உணர்வினில் எறிபவளே உந்தன் வனப்பு தேகம் போர்த்திய மிடுக்கு சுடிதார் என்ன தவம் செய்ததோ உன் தேகம் அணைத்து உன்னை காக்க அத்தனை தவமும் செய்யக் காத்திருகிறேன் எவனோ ஒருவனாய் உனக்காக … எமக்கு இடமளித்த வளையல் கடைக்கும் இதற்காகவே ஏற்பாடு செய்த திருவிழாவுக்கும் நன்றிகள் பல … -சரவணன் கந்தசாமி...

சிநேகிதம்

Image
  சி ல பேசு …                                                             சில மெளனி … சில சுவாசி … சில புன்னகை செய் … கொஞ்சம் விலகியிருந்து உற்று கவனி … சில சவால்களின் சிநேகிதம் இவ்வளவு தான் …. -சரவணன் கந்தசாமி...