Sunday, 7 January 2018

மாயம்

காக்கைகளை சுட்டுகையில்
கூட்டமென்று கூறுவதால்
தனித்து விடப்பட்ட காக்கைகள்
உவமைக் கூட உதவுவதில்லை!.

சிவகாசி சரவெடி சிதறுகையில்
தாவிக்குதித்த சிறுதுளி
காலருகே வெடிக்கும் வரை
கண்களுக்குத் தெரிவதில்லை

காலில் சக்கரம் பிணைக்கப்பட்டதால்
கடிகார நொடிமுள்
இவர்கள் கணக்கில்
தெரிவதில்லை

மசி தீர்ந்து போன பின் தான்
எழுதுவது பேனாவென்பது
ஏறத்தாழ தெரிகிறது

மண்டியிட்டு வணங்கப்பட்ட
இரும்பு இதயங்களை
எத்தனை இமைகள் திரும்பிப்பார்க்கின்றனர்...?

தெரியாத கல்லொன்று
"தெறி"க்கையில் உணர்கிறார்கள்

பெரும்பாறை நொறுங்குகையில்
உள்ளவாறு மறுக்கிறார்கள்...
உண்மையில் மறக்கிறார்கள்..

இனி என்ன?

புதிய பரிமாணம் தான்....


...
சரவணன் கந்தசாமி

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...