தீர்ந்து போன பேனா
திகட்டிப் போன இனிப்பு
நீர்த்துப்போன கண்ணீர்
நிரம்பி வழிந்த ஆறு
சிறகு விரித்த பறவை
சிரிப்பு மொழிந்த குழந்தை
சில கிறுக்கள் மேசைகளின்
எழுதாத பக்கங்கள்
என்னுடைய எண்ணத்தை
தட்டி எழுப்புகிறது,,,
புரிதலுற்றதலோ இந்த
பிரிதலும் ஆனதிங்கே….
பேனா பிடித்த சுட்டு விரல் நகம்
தேந்து போன
ரேகை மாயங்கள்
உன்னுடைய நினைவுகளை
உறுத்தலாய் பதித்துப்
புதுப்பிக்கும் பொழுதெல்லாம்
கண்ணீர் இல்லாமல்
கண்களை பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு அது அழகல்ல
என்பது உனக்கு தெரியும்….
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment