கதிரவன் கவ்வும்
காரிருள் உடைமை
இங்கே சூழ்ந்து
இயல்பை மறைத்தது!...
காற்றினூடும் இனிமையை
ஒளியினூடும் செழுமையை
உணரமுடியா சூழல்
உணரத் துடிக்கும் சூழல்
இரவும் பகலும்
அசையும் உயிர்களும்
அசையாப் பொருட்களும்
அகன்ற வானமும்
ஏக்கத்தின் மீதமாய்
இறுகிக்கிடக்கும்
இருளறைக் கைதிக்கு
இன்னொரு உலகம் தோன்றட்டும்...
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment