Tuesday, 12 February 2019

கதிரோவியம்

கதிரவன் கவ்வும்
காரிருள் உடைமை
இங்கே சூழ்ந்து
இயல்பை மறைத்தது!...
காற்றினூடும் இனிமையை
ஒளியினூடும் செழுமையை
உணரமுடியா சூழல்
உணரத் துடிக்கும் சூழல்
இரவும் பகலும்
அசையும் உயிர்களும்
அசையாப் பொருட்களும்
அகன்ற வானமும்
ஏக்கத்தின் மீதமாய்
இறுகிக்கிடக்கும்
இருளறைக் கைதிக்கு
இன்னொரு உலகம் தோன்றட்டும்...


-சரவணன் கந்தசாமி...

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...