Monday, 29 January 2018

புதுமைப் பெண்

அவன் கண்டான்....
அழகான அளவான
நெற்றியில் ஆகச்சிறிய
பொட்டு இட்டு
புருவப்பாதைகளைத் திருத்திக்கொண்டு
நாசியும் கண்ணும்
புருவமும் உச்சியும்
புடை சூண்டு நிமிர்ந்திருக்க
இரும்பின் வலிமையென
இளகிய கழுத்தும்
இன்னொரு சபதமாய்
எழுந்து நிற்கும் தோள்களில்
திமிரினை காணாத
திரட்சி தைரியத்தில்
அவன் கண்ட அவள்
மார்பு திரை மலிந்து விலகிடின்
தீச்சுட்ட இடமாய் திருத்தும் மாண்பு!...
காளைகள் அடக்க இடுப்பில்
சேலை ஏற்றி செருகி
களத்திற்கு வரும் வல்லமை!...
உண்மைக்கு உயர்த்தவும்
பொய்மைக்கு ஓங்கவும்
உருவான கைகள்
பூமிக்கு வலியாது
புழுக்களை இடராது
நடந்து வரும் கால்களுக்கும்
நிமிர்வு இருப்பதாய் கண்டான்!...
அத்தனையும் மெய்த்தது கவிஞா!..
உன் பார்வைகள் அத்தனையும் மெய்த்தது!...
அது
நாகரீகத்தில் மேலும் பொய்த்தது கவிஞா!...
வரைபடம் வரைகிறாள்
வாக்கியம் எழுதுகிறாள்
வகைப்பாடில்லாத நெற்றியில்
மழைக்கு பயந்தோடுகிறாள்
ஒப்பனைகள் கரைந்து
கலைந்து விடுமாம்
நகப்பூச்சுக்கும்
மருதாணிக்கும் கை சிவக்கும் அழகு
காதுகளின் துவாரங்களில்
கத்தி மாட்டுகிறது...
முழுவதும் மூடாத டி−சர்ட் இறுக்கங்கள்
முதல் பித்தான் திறந்த சட்டை
இவ்வகை மேலாடை
ரம்மியத்திற்கு முழுவதும்
பழக்கப்பட்டாள்...
தொலைக்காட்சி
அரங்கத்திற்கு வருபவள்
அரைடவுசரில் வருகிறாள்..
புலவா !.....
நீ கண்ட நிமிர் நடை
இடரா பாதம்
செருப்புகளின் அலைவரிசையில்
செத்துப்பிழைக்கிறது
இப்பாதங்களில் தளர்வு நிறைந்துள்ளது கவிஞா!...
ஆணி வேர் தத்துவம்
ஆணுக்கு நிகரென்ற சமத்துவம்
ஏற்கிறேன் குருவே!...
அடுப்பங்கரை சுதந்திரம் ஆனது இங்கே!...
உன் ஆசைப் படிப்பில்
முதல் மூன்றும் பெண்கள் குருவே!...
பதுமைகள் நெறியினூடும்
பவளங்கள் அறிவுனூடும்
புதுமைகள் கண்டாய் எம் தலைவா
அறிவினில் உந்தன் தாக்கம்
அளவில்லாமல் பழித்தது ...
பெண்மையின் நெறியினுள்
சற்று பொய்த்தது −இந்த
நாகரீகமெனும் ஊடுகலப்பினால்!...
இந்நொடியிலும்
உன் பார்வைக்கோர்வையில்
நடந்துயரும் கோடி மகளிரும்
போற்றுதலுக்குரியர்...
என்பதறிவேன்...
நாகரீகமும் ஆடம்பரமும்
அமிழ்நத இந்நூற்றாண்டில்
நீ கண்ட புதுமைப் பெண்கள்
எங்கே "மகாகவி"?

எனது கவிதைகளின் மீதான தங்களின் பார்வையிடுதலுக்கு
மெத்த மகிழ்ச்சியுடனான நட்பு நன்றிகள்......

-சரவணன் கந்தசாமி
29-01-2018

Thursday, 25 January 2018

குடியரசு தின வாழ்த்துகள்

உருவம் கொண்டு இழந்ததை
உணர்வு கொண்டு இழந்ததை
உயிரை மாய்த்து இழந்ததை
உள்ளங்கையில் இதயம் பதித்து
உயிராய் அதையும் ஏந்தத்தான்
உணர்வில் உயர்த்தி ஏற்றத்தான்
எத்தனை சிறைகம்பிகள்
எத்தனை லத்திகள் −நம்
தீரர்கள் தோலை சுவைத்திருக்கும்
அவை அத்தனைக்கும் ....
அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும்
சுதந்திர இந்தியாவின் 69வது
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

பெருமையுடன்..
-சரவணன் கந்தசாமி...

Tuesday, 9 January 2018

நண்பா

முயற்சி செய்தால் முடியும் இன்றே
திருப்பியனுப்பலாம் இரவை இங்கே
உறக்கத்தை உதறி எரிந்து
மூடத்தனத்தை மூட்டை கட்டி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
துவண்டு போனால் துரும்பாய் ஆவாய்
துள்ளி எழு தூணாய் நிற்பாய்
விவேகத்தோடு வெற்றி கொள்
வீரத்தோடு நிலைத்து நில்
விதியை மதியால் மிதித்து உடை
சதியை சன்னலில் தூக்கி வீசு
உழைப்பை தினமும் உணவாய் தின்று
களைப்பை, நாளும் கசக்கி கொளுத்து
பொறாமை இல்லா போட்டி கொள்
இவை அடங்கிய மன எழுச்சியால்
தடைகளை தாண்டிச் செல்.....

ரவணன்ந்தசாமி...

Sunday, 7 January 2018

தீ....

பாரதி!...
தொலை நோக்காளன் மட்டுமல்ல

சுட்டுவிரல் மை தடவிட்ட
இந்திய வாக்காளன் மட்டுமல்ல

இன்றைய கவித்துறை அமைச்சகன்
அது மட்டுமல்ல

குழந்தைகள் நல்வாழ்வு
பெண்கள் மேம்பாட்டு துறை
செயற்பாட்டாளன்..

எத்தனை துறைக்கு தலைமை
ஏற்கும் 
இந்த தமிழ் கிரீடம்....

ரவணன்ந்தசாமி...

மாயம்

காக்கைகளை சுட்டுகையில்
கூட்டமென்று கூறுவதால்
தனித்து விடப்பட்ட காக்கைகள்
உவமைக் கூட உதவுவதில்லை!.

சிவகாசி சரவெடி சிதறுகையில்
தாவிக்குதித்த சிறுதுளி
காலருகே வெடிக்கும் வரை
கண்களுக்குத் தெரிவதில்லை

காலில் சக்கரம் பிணைக்கப்பட்டதால்
கடிகார நொடிமுள்
இவர்கள் கணக்கில்
தெரிவதில்லை

மசி தீர்ந்து போன பின் தான்
எழுதுவது பேனாவென்பது
ஏறத்தாழ தெரிகிறது

மண்டியிட்டு வணங்கப்பட்ட
இரும்பு இதயங்களை
எத்தனை இமைகள் திரும்பிப்பார்க்கின்றனர்...?

தெரியாத கல்லொன்று
"தெறி"க்கையில் உணர்கிறார்கள்

பெரும்பாறை நொறுங்குகையில்
உள்ளவாறு மறுக்கிறார்கள்...
உண்மையில் மறக்கிறார்கள்..

இனி என்ன?

புதிய பரிமாணம் தான்....


...
சரவணன் கந்தசாமி

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...