புதுமைப் பெண்
அவன் கண்டான்.... அழகான அளவான நெற்றியில் ஆகச்சிறிய பொட்டு இட்டு புருவப்பாதைகளைத் திருத்திக்கொண்டு நாசியும் கண்ணும் புருவமும் உச்சியும் புடை சூண்டு நிமிர்ந்திருக்க இரும்பின் வலிமையென இளகிய கழுத்தும் இன்னொரு சபதமாய் எழுந்து நிற்கும் தோள்களில் திமிரினை காணாத திரட்சி தைரியத்தில் அவன் கண்ட அவள் மார்பு திரை மலிந்து விலகிடின் தீச்சுட்ட இடமாய் திருத்தும் மாண்பு!... காளைகள் அடக்க இடுப்பில் சேலை ஏற்றி செருகி களத்திற்கு வரும் வல்லமை!... உண்மைக்கு உயர்த்தவும் பொய்மைக்கு ஓங்கவும் உருவான கைகள் பூமிக்கு வலியாது புழுக்களை இடராது நடந்து வரும் கால்களுக்கும் நிமிர்வு இருப்பதாய் கண்டான்!... அத்தனையும் மெய்த்தது கவிஞா!.. உன் பார்வைகள் அத்தனையும் மெய்த்தது!... அது நாகரீகத்தில் மேலும் பொய்த்தது கவிஞா!... வரைபடம் வரைகிறாள் வாக்கியம் எழுதுகிறாள் வகைப்பாடில்லாத நெற்றியில் மழைக்கு பயந்தோடுகிறாள் ஒப்பனைகள் கரைந்து கலைந்து விடுமாம் நகப்பூச்சுக்கும் மருதாணிக்கும் கை சிவக்கும் அழகு காதுகளின் துவாரங்களில் கத்தி மாட்டுகிறது... முழுவதும் மூடாத டி−சர்ட் இறுக்கங்கள் முதல் பித்தான்...