Posts

Showing posts from January, 2018

புதுமைப் பெண்

அவன் கண்டான்.... அழகான அளவான நெற்றியில் ஆகச்சிறிய பொட்டு இட்டு புருவப்பாதைகளைத் திருத்திக்கொண்டு நாசியும் கண்ணும் புருவமும் உச்சியும் புடை சூண்டு நிமிர்ந்திருக்க இரும்பின் வலிமையென இளகிய கழுத்தும் இன்னொரு சபதமாய் எழுந்து நிற்கும் தோள்களில் திமிரினை காணாத திரட்சி தைரியத்தில் அவன் கண்ட அவள் மார்பு திரை மலிந்து விலகிடின் தீச்சுட்ட இடமாய் திருத்தும் மாண்பு!... காளைகள் அடக்க இடுப்பில் சேலை ஏற்றி செருகி களத்திற்கு வரும் வல்லமை!... உண்மைக்கு உயர்த்தவும் பொய்மைக்கு ஓங்கவும் உருவான கைகள் பூமிக்கு வலியாது புழுக்களை இடராது நடந்து வரும் கால்களுக்கும் நிமிர்வு இருப்பதாய் கண்டான்!... அத்தனையும் மெய்த்தது கவிஞா!.. உன் பார்வைகள் அத்தனையும் மெய்த்தது!... அது நாகரீகத்தில் மேலும் பொய்த்தது கவிஞா!... வரைபடம் வரைகிறாள் வாக்கியம் எழுதுகிறாள் வகைப்பாடில்லாத நெற்றியில் மழைக்கு பயந்தோடுகிறாள் ஒப்பனைகள் கரைந்து கலைந்து விடுமாம் நகப்பூச்சுக்கும் மருதாணிக்கும் கை சிவக்கும் அழகு காதுகளின் துவாரங்களில் கத்தி மாட்டுகிறது... முழுவதும் மூடாத டி−சர்ட் இறுக்கங்கள் முதல் பித்தான்...

குடியரசு தின வாழ்த்துகள்

உருவம் கொண்டு இழந்ததை உணர்வு கொண்டு இழந்ததை உயிரை மாய்த்து இழந்ததை உள்ளங்கையில் இதயம் பதித்து உயிராய் அதையும் ஏந்தத்தான் உணர்வில் உயர்த்தி ஏற்றத்தான் எத்தனை சிறைகம்பிகள் எத்தனை லத்திகள் −நம் தீரர்கள் தோலை சுவைத்திருக்கும் அவை அத்தனைக்கும் .... அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர இந்தியாவின் 69வது குடியரசு தின நல்வாழ்த்துகள்!.. பெருமையுடன்.. -சரவணன் கந்தசாமி...

நண்பா

Image
முயற்சி செய்தால் முடியும் இன்றே திருப்பியனுப்பலாம் இரவை இங்கே உறக்கத்தை உதறி எரிந்து மூடத்தனத்தை மூட்டை கட்டி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு துவண்டு போனால் துரும்...

தீ....

Image
பாரதி!... தொலை நோக்காளன் மட்டுமல்ல சுட்டுவிரல் மை தடவிட்ட இந்திய வாக்காளன் மட்டுமல்ல இன்றைய கவித்துறை அமைச்சகன் அது மட்டுமல்ல குழந்தைகள் நல்வாழ்வு பெண்கள் மேம்ப...

மாயம்

Image
காக்கைகளை சுட்டுகையில் கூட்டமென்று கூறுவதால் தனித்து விடப்பட்ட காக்கைகள் உவமைக் கூட உதவுவதில்லை!. சிவகாசி சரவெடி சிதறுகையில் தாவிக்குதித்த சிறுதுளி காலருகே வெடிக்கும் வரை கண்களுக்குத் தெரிவதில்லை காலில் சக்கரம் பிணைக்கப்பட்டதால் கடிகார நொடிமுள் இவர்கள் கணக்கில் தெரிவதில்லை மசி தீர்ந்து போன பின் தான் எழுதுவது பேனாவென்பது ஏறத்தாழ தெரிகிறது மண்டியிட்டு வணங்கப்பட்ட இரும்பு இதயங்களை எத்தனை இமைகள் திரும்பிப்பார்க்கின்றனர்...? தெரியாத கல்லொன்று "தெறி"க்கையில் உணர்கிறார்கள் பெரும்பாறை நொறுங்குகையில் உள்ளவாறு மறுக்கிறார்கள் ... உண்மையில் மறக்கிறார்கள் .. இனி என்ன? புதிய பரிமாணம் தான்.... ... சரவணன் கந்தசாமி