Posts

Showing posts from 2019

பித்தனின் பேனா

நேர் எதிர்

அ கன்ற வானத்தின் அ ளவில்லாத எல்லைக்கப்பால் ஆ யிரம் வானவில்கள் ஆ ண்மை பெறுகிறது இ யல்பினதாய் இந்நிகழ்வை இ ங்குள்ளோர் நினைத்துவிடின் ஈ க்களின் சிறகசைவில் ஈ ன்ற கன்றின் முதல் இசையில் உ யிரில் நிலை பெற்று ஊ க்கம் அதைப் பெற்று எ ழம்பும் சுவராக ஏ ழு ஸ்வரமாக ஐ யத்தை துளையிட்டு ஒ ற்றை நோக்கோடு ஓ ராயிரம் முயற்சிகளுடன் ஒள வியம் போற்றி நில் " ஃ" ஏந்தி நில்!..... -சரவணன் கந்தசாமி...

கதிரோவியம்

கதிரவன் கவ்வும் காரிருள் உடைமை இங்கே சூழ்ந்து இயல்பை மறைத்தது!... காற்றினூடும் இனிமையை ஒளியினூடும் செழுமையை உணரமுடியா சூழல் உணரத் துடிக்கும் சூழல் இரவும் பகலும் அசையும் உயிர்களும் அசையாப் பொருட்களும் அகன்ற வானமும் ஏக்கத்தின் மீதமாய் இறுகிக்கிடக்கும் இருளறைக் கைதிக்கு இன்னொரு உலகம் தோன்றட்டும்... -சரவணன் கந்தசாமி...

உடையும் மனமொழி

Image
   தினமும் எதிர்கொள்கின்ற சில சவால்கள் போலே எனது மாணவப்பருவத்தில் செவி வழிச் செய்தியாய் பள்ளித் தோழிகள் பேச்சு வழக்காக பைசிய நினைவுகள் அவர்களின் அன்றைய வேதனைகள் எனக்குள் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அன்று . ஏனெனில் நான் அவர்களில் ஒருவனாக (பெண்ணாக) இல்லை. அன்று என்னால் கடக்க முடிந்த அந்த நிகழ்வினை ஒரு சாமானியனாக , மாணவனாக என்னால் இன்று அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலவில்லை .   மாற்றத்தை கனவு காணும் ஒரு சாமானிய இளைஞனாக எழுதுகிறேன் இதன் உண்மைத்தன்மையின் ஒரு அடியேனும் உங்கள் மனதில் நுழைந்து நூலளவு மாற்றம் ஏற்படினும் பெருத்த மகிழ்வு கொள்வேன்.    நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் தரணியிலே யாவருக்கும் அஞ்சாத தன்மையும் பெண்களுக்கு வேண்டுமென்ற பாரதியின் ஏவல் தான் எனது தேடுபொறி.    பெண்ணவளை வரம்புக்குள் வைத்து வாழப் பழக்கிய நம் சமூகத்தில் தான் வேலுநாச்சியாரும் , குயிலியும் மேலும் அசோகச்சக்கரவர்த்திக்கு மெய்க்காப்பாளர்களாய் பெண்கள் வீறுநடை போட்டிருக்கிறார்கள் . இந்த பெண்களின் இளையதலைமுறை இன்று பள்ளிகளால் விதைக்கப்படுகின்றன. இந்...