எனது அரசி

இ ளஞ்சிவப்பில் இன்னொரு நினைவுகள் எழ முயற்சித்து விழும் குழந்தையாய் தினமும் உன்னை எழுத நினைத்து தோற்றதில் என்னை மிஞ்ச எவரும் இல்லை இங்கு …. விரைவாய் , காதல் திரையாய் விழும் வார்த்தைகள் வழுக்கி உடைகின்றன … மதயானையை அடக்க எத்தனிக்கும் வீரனாய் எழுத்தின் தோல்வியை என்னுள் புதைத்து உனதுருவில் கவிதைகளை கட்ட நினைக்கிறேன் தமிழ் சலவைக் கற்களை பட்டை தீட்டி தாஜ்மஹால் அளவு இல்லையெனினும் தரமான ஓலைக் குடிசை பின்னத்துடிக்கும் நானும் சாஜஹான் தான் … எழுத்தின் முதலாய் பிள்ளையார் சுழி எல்லாவற்றின் முதலாய் மதத்தை முன்னிறுத்தவில்லை இறைவனை முன்னிறுத்துகிறேன் … முதன்முதலாய் நட்டு வைத்த மாங்கன்று வளர்ந்து உயர்ந்து முதிர்ந்து பிஞ்சாகி காயாகி கனியாகி - அதன் அமுதமெனும் காதல் சுவையில் சிறகு விரித்து கனவுகளில் உயரப் பறக்கிறது … மார்கழி அடர்குளிரில் இறுக்கி அணைத்திட எண்ணும் பெரும் தீயின் இளஞ்சூட்டை தொடாத தூரம் நின்று படாத தேகம் இங்கே கதகதப்பை அள்ளிக் குளித்து கரையேறும் வடதுருவ கரடிபோலே ஆனந்த தாண்டவம் அதிலொரு ஏக்கச் சிந்தனை என்னவளை நினைந்திடின் இருதய...