Wednesday, 22 April 2020

எனது அரசி


ளஞ்சிவப்பில் இன்னொரு நினைவுகள்
எழ முயற்சித்து விழும் குழந்தையாய்
தினமும் உன்னை எழுத நினைத்து தோற்றதில்
என்னை மிஞ்ச எவரும் இல்லை இங்கு….
விரைவாய், காதல் திரையாய்
விழும் வார்த்தைகள் வழுக்கி உடைகின்றன
மதயானையை அடக்க எத்தனிக்கும் வீரனாய்
எழுத்தின் தோல்வியை என்னுள் புதைத்து
உனதுருவில் கவிதைகளை கட்ட நினைக்கிறேன்
தமிழ் சலவைக் கற்களை பட்டை தீட்டி
தாஜ்மஹால் அளவு இல்லையெனினும்
தரமான ஓலைக் குடிசை பின்னத்துடிக்கும்
நானும் சாஜஹான் தான்
எழுத்தின் முதலாய் பிள்ளையார் சுழி
எல்லாவற்றின் முதலாய் மதத்தை முன்னிறுத்தவில்லை
இறைவனை முன்னிறுத்துகிறேன்
முதன்முதலாய் நட்டு வைத்த மாங்கன்று
வளர்ந்து உயர்ந்து முதிர்ந்து
பிஞ்சாகி காயாகி கனியாகி- அதன்
அமுதமெனும் காதல் சுவையில்
சிறகு விரித்து
கனவுகளில் உயரப் பறக்கிறது
மார்கழி அடர்குளிரில்
இறுக்கி அணைத்திட எண்ணும்
பெரும் தீயின் இளஞ்சூட்டை
தொடாத தூரம் நின்று
படாத தேகம் இங்கே
கதகதப்பை அள்ளிக் குளித்து
கரையேறும் வடதுருவ
கரடிபோலே ஆனந்த தாண்டவம்
அதிலொரு ஏக்கச் சிந்தனை
என்னவளை நினைந்திடின்
இருதயமும் மூளையும்
இடம்மாறி அடித்துக் கொள்கின்றன
நீ
என் மாமன் கரிகாலன் வம்சத்தின்
கடைசி இளவரசி
உன் தகப்பனின் கல்லணை போல
ஓர விழி பார்வையிலே தாளமிட்டு
பொய்யாக கோபப்பட்டு
மெய்யாக உனக்குள்ளே
மெழுகு உருகும் புன்னகையில்
காதல் காற்றாற்று வெள்ளத்தின்
தடுப்பணைக்கு சொந்தகாரி
பிற பெண்மைக்கு வகுபடாத
அசட்டு புன்னகை
பாரதியின் சாயலில்
அதிலொரு நாணம்….
திருட நினைத்த முகச் சாயலில்
புத்தன் பெறாத ஞானம்- என்
புத்தி பெற்று நின்றிட
நீ மந்திரவாதி
நான் தந்திரவாதி….
இடமோ வலமோ எதுவாயினும்
இமையை விலக்கி விட்டு
தேடாத தோணியில் எனைத்தேடும்
இந்த கருவிழி அச்சுப்பொறியை
கூகுளின் காதலுக்கான தேடுபொறியாய்
மாற்றியமைக்க அண்ணன்
சுந்தர் பிச்சையிடம் வேண்டுகோள்
வைத்திருக்கிறேன்.


-சரவணன் கந்தசாமி...

வகுப்பறை


த்தங்களால் முத்தமிட்டு
தொடங்கிய பாடம்
கிறுக்கச் சொன்ன
எழுதுகோல் வாசனை
கரங்கள் இணைத்து
அறுத்து அகற்றிய
தீண்டாமை யோசனை
நிறைந்த இனிப்பில்
திகட்டாத நா….
வகுப்பறை
வேதியியல் வினையில்
கவிதை பிரசவித்த
களஞ்சிய கூடம்
தமிழால் நா தாகம்
தீர்த்த தண்ணீர் பந்தல்
உயிரியலென பிரபஞ்சம்
பார்வையிட்ட
நகராச் சுற்றுலா
அந்த வகுப்பறை
சாரல் மொழி
சமிஞைகளால்வெற்றிடமானது
அந்த வகுப்பறை
அன்று கிறுக்கிய
எழுத்துகளின்  முயற்சி
இன்று கிறுக்குகிற
கவிதைகளின் தொடர்ச்சி….
அள்ளிக் கொடுத்தது
அந்த வகுப்பறை
அன்றும் புதியதாயில்லை
இன்றும் பழையதாயில்லை
என்றும் மறைவதாயில்லை
எந்தன் வகுப்பறை
வாடைக் காற்றால்
இடைவெளியானது
வகுப்பறைக்கும் எனக்கும்
தென்றல் காற்றால்
இணைவானது இந்நொடி
வகுப்பறைக்கும் எனக்கும்

-சரவணன் கந்தசாமி...


தோழி


தீர்ந்து போன பேனா
திகட்டிப் போன இனிப்பு

நீர்த்துப்போன கண்ணீர்
நிரம்பி வழிந்த ஆறு
சிறகு விரித்த பறவை
சிரிப்பு மொழிந்த குழந்தை
சில கிறுக்கள் மேசைகளின்
எழுதாத பக்கங்கள்
என்னுடைய எண்ணத்தை
தட்டி எழுப்புகிறது,,,
புரிதலுற்றதலோ இந்த
பிரிதலும் ஆனதிங்கே….
பேனா பிடித்த சுட்டு விரல் நகம்
தேந்து போன
ரேகை மாயங்கள்
உன்னுடைய நினைவுகளை
உறுத்தலாய்  பதித்துப்
புதுப்பிக்கும் பொழுதெல்லாம்
கண்ணீர் இல்லாமல்
கண்களை பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு அது அழகல்ல
என்பது உனக்கு தெரியும்….

-சரவணன் கந்தசாமி...


பேனா




ட்டுமொத்த எண்ணத்தின்
ஒப்பில்லாத சுட்டுவிரல் ஒற்றன்
காகிதத்திற்கும் கருத்துக்குமாய்
கடிதங்கள் வரைந்தவன்
வள்ளுவனுக்கும் கம்பனுக்கும்
இலக்கியமாய் ஒற்றி நின்று
வரலாறு தந்தவன்….
நாவடக்கம் சொன்ன தமிழை
நளினமாய் மெய்யில் கோர்த்து
தலைமுறைகள் ஞானம் பெற
காகித்தில் உரைத்தவன்
அரசியல் நெற்றிக்கண் திறப்பினுமிங்கே
குற்றம் குற்றமாயின்
தயவில்லா தண்டனைக்கு
தர்க்கம் சுழித்து
அரசியல் சாசன பதிப்பின் அர்த்தம் தந்தவன்
தமிழ் மீசைக் கவிஞன்
நாட்டை மீட்ட்தும் இவனால்
கவியரசு காகிதத்தில்
தத்துவம் தந்ததும்  இவனால்
அடிமை பொருளாதாரத்தால் முடக்கப்பட்டவன்
பொறுக்கமுடியா உணர்ச்சிகளை
முதல்வனுக்கும் செய்தியனுப்ப
முடியுமென  முழங்கியவன்
எல்லோரும் ஓர்குலமாய்
எந்நாளும் நின்றிடவே
எழுத்துலகில் இவனிருக்க
எழுத்தாளனுக்கு ஏது பயம் ?
அவரின் அக்கினி குஞ்சொன்றெடுத்து
அணையாத இவனில் நுழைத்து
அறிவுக்கும் இங்கே
ஆற்றலுக்கும் இங்கே
ஆகமங்கள் செய்திட வேண்டும்
எனக்குமாய் எல்லோர்க்குமாய்
விரல் ரேகைக்கும் வெள்ளைத்தாளுக்கும்
குறும்பாலம் குடைந்த குயவன்….
கொப்பளிக்கும் மனவெழுச்சியை
குறிதவறாமல் இந்நொடி
குதூகலமாய் இலக்கிய கல்வெட்டில்
பொறித்துக் கொண்டிருக்கும்
வித்தக கவிஞகன்
பேனா……


-சரவணன் கந்தசாமி...

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...