Posts

Showing posts from October, 2020

சிவக்கும் தேசம் : சரவணன் கந்தசாமி

Image
ஆணியம் தலை தாழ்கிறது        ஆஷிஃபாவுக்கும் மணீஷாவுக்கும் நிர்பயாவுக்கும் நிசப்த அஞ்சலி செலுத்த!... இன்னும் எத்தனை நிர்பயாக்கள் நம் கண்ணுக்கு புலப்படாதவர்களோ? பால் மணம் மறக்காத பச்சிளம் குழந்தையும் அறுபதை கடந்து நிற்கும் மூதாட்டிகளும் உடலை வைத்து வேடிக்கையாய் அப்படியென்ன செய்து விட்டார்கள்? அப்படி என்ன தான் செய்ய முடியும்? ஆணவக்காரனே   ஆண் குறியொன்று இருந்துவிட்டால் உமக்கு அடிமையா இந்த அத்தனை பேரும் ? குழந்தை மொழி பார்த்தும் கூட அந்த மென்மை சதையை தொட்டும் கூட காமம் உன்னை கவ்விக் கொண்டால் உன் இதயம் என்ற ஒன்றை அறுத்து நீ வெளியே வை!... உலகில் வஞ்சகமற்றது குழந்தை மொழி உமக்கு வஞ்சகமாய் தெரிவது ஏனோ?... கவர்ச்சி என்ற ஒன்றை நீ காட்டி விடு குழந்தையிடம் மறுமைப் பிறப்பில் மனிதம் இல்லாமல் போகட்டும் அறுபது கண்ட கிழவியிடம் அப்படி என்ன நீ கண்டாய்?... வெறும் , தோலை ருசிக்கும் மிருகமாயின் உன்னை வேட்டையாடி தீர்ப்போமே!... எத்தனை கனவுகள் சுமந்திருப்பாள் எதிர்காலம் ஒன்றை வரைந்திருப்பாள் அத்தனையையும் அழித்தொழிக்க அவள்...